ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் கொள்கைகளையும் கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் வீ.கலைச்செல்வன், எல்பிஎப் மாவட்ட செயலாளர் கே.எஸ்.மகாதேவன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரெகுபதி, ஐஎன்டியுசி மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தனர். சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.