districts

img

மாற்றுத்திறனாளியின் இறப்புக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,  ஜன.18 - மயிலாடுதுறை கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் டி.கணேசன் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த  மாற்றுத்திற னாளியின் இறப்புக்கு நீதி வேண்டும். இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், டி.கோவிந்தசாமி, ஜி. செல்வராஜ், நிர்வாகிகள் ராஜேந்திரன், சபா.அருள்மணி, சொக்கலிங்கம், புருஷோத்தமன், உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் சங்க அமைப்பாளர் லெட்சுமி  ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜி. ரவிச்சந்திரன் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.