கும்பகோணம், பிப்.21- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத் தினரையும் தமிழ்நாடு மாண வர்களையும் தாக்கிய பாஜக மாணவர் அமைப்பான ஏபி விபி அமைப்பினரை கண்டித் தும், மாணவர்கள் விரோத அமைப்பை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி யும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கம் மாநகரச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். கல் லூரி கிளை தலைவர் ஜேம்ஸ், செயலாளர் பிர தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.