திருச்சிராப்பள்ளி, ஜூலை 26 -
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமி ழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங் களில் வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக திறந்து விட வேண்டும். தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட காவிரி நதிநீர் ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மற்றும் புற நகர் மாவட்ட குழுக்கள் சார்பில் திரு வெறும்பூர் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டி யன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாநில துணைத் தலைவர் முகமதலி, புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் குருநாதன் ஆகியோர் பேசினர்.
பூதலூர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு, வடக்கு ஒன்றியம் சார்பில் பூதலூர் நான்கு ரோட்டில், தெற்கு ஒன்றியத் தலைவர் கெங்கை.பாலு, வடக்கு ஒன்றியத் தலைவர் கே.காந்தி தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்கம் மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் (வடக்கு), சி.பாஸ்கர் (தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றி யம், நாச்சியார்கோயில் கடைத்தெரு வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் குண சுந்தரி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் என்.சந்திர மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் உத்திராபதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.