திருச்சிராப்பள்ளி, ஆக.23 - திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தளுகை ஊராட்சி சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் இரா.முத்துக் குமார் பேசுகையில், 24-6-2024 அன்று துறையூர் வட்டாட்சியர் தலைமையில் தளுகை ஊராட்சி விவசாயத் தொழிலா ளர்களுக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், தினசரி ஆயிரம் பேருக்கு நூறு நாள் வேலை வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக்கொண் டது. இதைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு வேலை வழங்கவில்லை. விரைவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப் படி அனைவருக்கும் நூறு நாள் வேலையை வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் முழு கூலி 319 ரூபாயை வழங்குவதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு வாரந்தோறும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண் டும். தளுகையில் மட்டுமல்லாமல் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் நூறு நாள் வேலையை தொ டர்ந்து வழங்குவதுடன் கூடுதலான மக்க ளுக்கு வேலை வழங்க வேண்டும். தளுகை ஊராட்சியில் 3000 குடும்ப அட்டைகளில், 1399 பேர் ஆறு நாட்கள் மட்டுமே, நூறு நாள் வேலை பார்த்துள்ள னர். 10-லிருந்து 20 நாட்களுக்குள் 766 பேர் வேலை பார்த்துள்ளனர். 21 முதல் 30 வரை 73 பேரும், 31 முதல் 40 நாட்கள் வரை 21 பேரும், 41 முதல் 50 வரை 10 பேரும் வேலை செய்துள்ளனர். இந்நிலைமை மாறிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது சட்ட மாக்கப்பட்டதாகும். அதனை உயிர்ப்பு டன் வைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரி களும் அலுவலர்களும் முயற்சி செய்வ தன் மூலம் கிராமப்புற ஏழை-எளிய மக்க ளின் வாழ்வாதாரம் காத்திட இத் திட்டத்தை போற்றி பாதுகாக்க வேண் டும். சாலை மேம்பாடு குறித்து கருத்து கேட்கப்படும் போது, மக்கள் பிரதிநிதி களை கலந்து ஆலோசிக்காமல் அதி காரிகள் தன்னிச்சையாக நடந்து கொள் கிறார்கள். இந்த போக்கினை மாற்றி அனைவரிடமும் கலந்து ஆலோசித்து, அந்தந்த பகுதியில் மேம்பாடு செய்ய வேண்டிய சாலையை கண்டறிய வேண்டும். 2023-24 மத்திய நிதி குழுவின் மானிய நிதியில், தளுகை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் மீது உடனடியாக நிர்வாக அனுமதி பெற்று தளுகை ஊராட்சி, நெய்க்காரன் குட்டை ஊராட்சிக்குச் சொந்தமான கிணற்றின் குடிநீரைக் கொண்டு, த.மங்கப்பட்டி புதூர் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்தார். ஊராட்சி ஒன்றிய துணை ஆணை யர் பதிலளித்து பேசுகையில், உறுப்பின ரின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறை வேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதியளித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் துணை ஆணையர் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். துணைத்தலைவர் கலைச்செல்வி சிலையழகன் நன்றி கூறினார்.