கும்பகோணம், மே 6-
டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலா ளர்களுக்கு மதுபான பெட்டி இறக்கு கூலி உடனடியாக உயர்த்திட வலியுறுத்தி கும்ப கோணம் அருகே உள்ள திருபுவனத்தில் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலா ளர்கள் மதுபான பெட்டிகளை இறக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர் சம்மேளன திருபுவனம் கிளை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி ஜெய பால் மாவட்ட துனை தலைவர்கள் சா.ஜீவ பாரதி, என்.பி.நாகேந்திரன், ஆர்.சேகர் ஆகி யோர் விளக்கிப் பேசினர். கிளை செயலாளர் பிரபு, பொருளாளர் சரவணன் உள்ளிட்ட சுமை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ.5.50-லிருந்து ரூ.8 ஆக வழங்க வேண்டும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-லிருந்து ரூ.8 ஆகவும், பெட்டிக்குள் பெட்டி ஒன்றுக்கு ரூ.6.50 லிருந்து ரூ.9 ஆகவும் வெளிநாடு மது பான பெட்டி ஒன்றுக்கு ரூ.50 லிருந்து ரூ.60 ஆக வும் குடோன் விட்டு குடோன் இறக்கும் பெட்டி களுக்கு ரூ.10-லிருந்து ரூ.15 ஆகவும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.