காவிரி விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு
தஞ்சாவூர், செப்.22 - காவிரி விவகாரத்தில், மேலாண்மை ஆணையத்தின் உத்தர வில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது. 5,000 கன அடி தண்ணீர் என்பது குறுவை பயிருக்கு போதுமானதாக இருக்காது. சம்பா சாகுபடியை செய்ய முடியாத சூழல் ஏற்படும். இருப்பினும், பற்றாக் குறை காலங்களில் இரண்டு மாநிலங் களும் எப்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறை யின்படி இம்மாத தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக ஏற்கனவே வழங்க வேண்டிய தண்ணீரை கேட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் செயல் பாட்டை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்றார். தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாது காப்பு சங்கச் செயலர் விமல்நாதன் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு வின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூற முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்த ரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருப்பது வர வேற்கத்தக்கது. இருப்பினும், இந்தாண்டு குறுவை சாகுபடி பரப்பு சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகா அரசு தர வேண்டிய தண்ணீரை தராததால் ஏற்பட்ட பாதிப் பிற்கு இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர வேண்டும். மேலும், காவிரி சமவெளி மாவட்டங் களை வறட்சி பாதித்த மாவட்டங் களாக ஒன்றிய, மாநில அரசுகள் அறி வித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், நிகழாண்டு சுமார் 12 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி சாகுபடி கேள்விக்குறி யாகியுள்ளது. இதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாண்டியன் கூறுகையில், “ஜூலை முதல் வாரத்திலேயே ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, சட்ட நட வடிக்கைகள் எடுக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டிருந்தால் குறுவை பயிர்கள் கருகத் துவங்கி இருக்காது. சம்பா சாகுபடியை மேற்கொண்டிருக்க முடியும். இருப்பினும், தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தான் அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதி மன்ற தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இனியாவது உரிய முறை யில் காவிரி மேலாண்மை ஆணை யத்தை செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, விவசா யிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது” என்றார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செப்.24-இல் வழிகாட்டு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, செப்.22 - டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் செப்.24 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்ற உப்பிலியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்கள், தங்களது சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெறலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நூலக மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
செப்.26 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், செப்.22 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 26 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவ சாயிகளுக்குத் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி நிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீர்ப் பாசனம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கால்நடை, கூட்டுறவு, மின்சா ரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரி விக்கலாம். கருத்துகள் தெரிவிக்க விரும்புவோர் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை செப்டம்பர் 26 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிய வேண்டும். மேலும், விவசா யிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிந்து ஒப்புதல் பெற்று, பின்னர் அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தியாகி என்.வெங்கடாசலம் நினைவு தின அஞ்சலி
தஞ்சாவூர், செப்.22 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனி வாசல் கிராமத்தில் தஞ்சை தியாகி தோழர் என்.வெங்கடாசலம் நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சந்தாப் பதிவு நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் வி.கருப்பையா, விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, தென்னை விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.வேலுசாமி, சேதுபாவா சத்திரம் வி.ச. ஒன்றிய செயலாளர் வி.ஆர்.கே.செந்தில் மற்றும் கழனிவாசல் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ரூ.25 ஆயிரம் லஞ்சம் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் கைது
கரூர், செப்.22- பெட்ரோல் நிலையத்தில் ஊழியர்களின் ஊதிய விவ ரங்களை மறைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலா ளர் நலத்துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீ சார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் செயல்படும் தொழி லாளர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆய்வாளராக பணி யாற்றி வருபவர் தங்கையன் (58). இவர் கரூர் மாவட்டத்தில் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் ஊழியர்களின் ஊதியம் மற்றும் அவர்களுக்கான தொழிலாளர் நலவாரிய சலுகைகள் தொடர்பான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரூர் மாவட்டம், தரகம் பட்டி அருகே உள்ள முள்ளிபாடியில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்குள்ள ஊழி யர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டத்தின்படி முறையான ஊதி யம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல் நிலைய உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், அபராத விதிப்பை கைவிடுவதாக வும் கூறியுள்ளார். பின்னர், பெட்ரோல் நிலைய உரிமையாளர் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு தங்கையன் சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பெட்ரோல் நிலைய உரிமையாளர், இதுதொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புதன்கிழமை புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வியாழனன்று கரூர் லஞ்ச ஒழிப்பு துணைக் காவல் கண்கா ணிப்பாளர் நடராஜன் தலைமையிலான போலீசார், பெட்ரோல் நிலைய உரிமையாளரிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்து, துணை ஆய்வாளர் தங்கையனிடம் கொடுக்குமாறு கூறினர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் பணத்தை தங்கையனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு?
கும்பகோணம், செப்.22- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சக்கர படத்துறை அருகே ஜீயர் மடத்தில் இரண்டு பேர் மர்மமான முறை யில் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல்துறை ஆய்வாளர் (பொ) ராஜா, இருவரின் உடலையும் மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய தில், அவர்கள் கும்பகோணம் பெருமாண்டி பகுதியைச் சார்ந்த பெயிண்டர் பாலகுரு (50) மற்றும் கர்ணகொல்லை கீழத் தெருவைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (40) என்பதும், இவர்கள் இருவரும் நண்பர்கள் எனவும் தெரிய வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும், கை கழுவும் சானிடைசர் பொருட்களுடன் சுற்றித் திரிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். போதைக்காக மதுவில் சானிடைசரை கலந்து குடித்து இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறை யினர் கூறுகையில், இருவரும் இறந்த நிலையில், அவர்கள் அருகே சானிடைசர் போன்ற பொருட்கள் எதுவும் தென்பட வில்லை. உடற்கூறாய்வுக்குப் பிறகே, மதுவில் எதுவும் கலந்து குடித்து இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவரும்என்றனர்.
ஒன்றிய அரசின் தோல்விகளை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு ஜவாஹிருல்லா எம்எல்ஏ சாடல்
பாபநாசம், செப்.22- ஒட்டுமொத்த தோல்விகளை மறைப்ப தற்காகவே மகளிர் இட ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துவதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பி னருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய பாஜக அரசு தனது ஒட்டுமொத்தப் படு தோல்விகளை மறைக்கின்ற படுதாவாக மகளிர் இட ஒதுக்கீட்டைப் பயன் படுத்துவது மிக வெளிப்படையாகவே தெரி கிறது. மகளிர் முன்னேற்றத்தின் மீது ஒன்றிய பாஜக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சியின் அந்திமக் காலம் வரை காத்திருந்திருக்காது. 2010-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்மொழிந்த இந்த மசோதாவிற்கு, பாஜக அன்றே ஆதரவு தெரிவித்திருந்தால் இந்த மசோதா அப்போதே நிறைவேறியிருக்கும். நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நாட்டின் அமைதியைக் குலைத்து வேளாண் குடிகளை வேரோடு சாய்க்கும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இஸ்லாம் மார்க்கமே 1400 ஆண்டு களுக்கு முன் தடைச் செய்து விட்ட முத்த லாக்கை தானே தடைச் சட்டம் இயற்றித் தடுத்தது போல நாடகமாடியது. காஷ்மீரின் சிறப்புத் தகுதியை உறுதிப் படுத்தும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்து காஷ்மீரை மூன்றாகக் கூறு போட்டு வெறியாட்டம் நடத்தியது. அதனால் ராணுவத்தினர் உட்பட ஏராள மனித உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியா வையே கொந்தளிக்க வைத்தது. இவ்வாறு வேண்டாத சட்டங்களால் நாட்டில் வேதனை அலைகளை உருவாக்கிய ஒன்றிய பாஜக அரசு அப்போதெல்லாம் ஏன் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மருந்துக்கும் பேசவில்லை? இப்போது ‘இந்தியா’ கூட்டணி பாஜக வின் வயிற்றில் புளியைக் கரைத்து வரும் வேளையில், மகளிர் இட ஒதுக்கீடு என்ற முக்காட்டைப் போர்த்திக் கொண்டு தனது மூர்க்கத்தனங்களை மறைக்க முயல்கிறது. மானுடத்தின் சரிபாதியான மகளிருக்கு இட ஒதுக்கீடு மிகவும் அவசியமானது. அதே நேரம் மகளிர் இட ஒதுக்கீட்டிலும் சமூகநீதி பேணப்பட வேண்டும். ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனங் களைச் சார்ந்த மகளிருக்கு அதில் உள் ஒதுக்கீடு கண்டிப்பாக இருந்திட வேண்டும். இல்லையேல் சமூகநீதி அர்த்தமிழந்து போகும். தொகுதி மறுவரைக்குப் பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறைக்கப் படுவதையும் வடமாநிலத் தொகுதிகள் அதி கரிக்கப்படுவதையும் ஒரு போதும் ஏற்க இயலாது. மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.