மயிலாடுதுறை, அக்.8 - மயிலாடுதுறை பாலக் கரை அருகிலுள்ள தானா மஹால் தோழர்.ஆர்.ரவீந்தி ரன் நினைவரங்கில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகர மாநாடு செவ்வாயன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு யூ.ராஜேந் திரன், ஹெச்.ஜம்ருத்பேகம் ஆகியோர் தலைமைக் குழு வாக தேர்வு செய்யப்பட்ட னர். கட்சியின் மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் கே.ஆர்.ஜி.வேதவள்ளி ஏற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. மாரியப்பன் உரையாற்றி னார். மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடைக்கு புதிய திட்டத்தை அறிவித்து சர்வ தேச கட்டுமான நிறுவ னத்தைக் கொண்டு பணி களை மேற்கொள்ள வேண் டும். போக்குவரத்து நெரி சல் அதிகம் உள்ளதால், புற வழிச்சாலை பணியை விரை வாக துவங்கி முடிக்க வேண்டும். நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் பாது காக்கப்பட்ட குடிநீரை இரு வேளைகளிலும் தடையின்றி வழங்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி பரப்ப ளவுள்ள இடத்தில், ஆவின் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க வேண்டும். மாவட்ட தலைமை மருத்து வமனையை அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 7 பேர் கொண்ட புதிய நகரக் குழு தேர்வு செய்யப் பட்டு புதிய செயலாளராக டி.துரைக்கண்ணு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஸ்டாலின் நிறை வுரையாற்றினார்.