districts

விவசாயத்தை அழிக்கும் வகையில் செயல்படுவதா?

கரூர், செப்.10 - விவசாயத்தையும், விவசாயி களையும் அழித்திடும் நோக்கில் செயல்படும் குளித்தலை பொதுப்  பணித்துறை ஆற்றுப் பாதுகாப்புத் துறை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றி யக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவ தாக ஒன்றியச் செயலாளர் தெரி வித்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: காவிரிக் கரையில் உள்ள கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா வுக்குட்பட்ட பகுதிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் கருங்கலாப்பள்ளி அருகே  கட்டளை மேட்டு மெயின் வாய்க்கா லில் பாலம் கட்டுமான பணிக்காக குழாய் அமைத்து தண்ணீர் தேக்கி  வைக்கப்பட்டுள்ளது. இதனால் சேப்பளாபட்டி அருகே உள்ள மதகு-26 இல் அரை மீட்டர் தண்ணீர் அளவு மட்டுமே உள்ளது. இந்த மதகில் 1.25 மீட்டர் அளவு தண்ணீர் இருந் தால் மட்டுமே பாசனத்திற்கு மதகை  திறக்க முடியும். நச்சலூர் சி கிளாஸ் பகுதி மதகு-19-க்கும் பாச னத்திற்கு தண்ணீர் இல்லை.  இதனால் மாடு விழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, தென்கடை குறிச்சி, பனையூர், மேட்டுக்காடு, முதலைப்பட்டி, பாறைப்பட்டி, சூரியனூர், மேலப் பட்டி, நெய்தலூர் காலனி, தெற்கு பட்டி, கோப்பு உள்ளிட்ட கிராமங் களில் 2,200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் போதுமான பாசன தண்ணீர் இல்லாததால், நெல் நாற்றங்கால்கூட போட முடியவில்லை. அனைத்து விவ சாய நிலங்களும் தரிசு நிலங்க ளாக காட்சி அளிக்கின்றன. எனவே உடனடியாக குளித் தலை பொதுப் பணித்துறை ஆற்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தலையிட்டு, கருங்கலாப்பள்ளி அருகே கட்டளை மேட்டு மெயின்  வாய்க்காலில் கட்டுமான பணிக் காக போடப்பட்டுள்ள குழாய்களை  அகற்றி பாசனத்திற்கு உடனடி யாக தண்ணீரை திறந்து விட வேண்டும்.  விவசாயத்தையும் விவசாயி களையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி செப்.12 (வியாழன்) அன்று  காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை  ஒன்றியக் குழு சார்பில், குளித்தலை  பெரிய பாலத்தில் உள்ள ஆற்று பாதுகாப்புத்துறை, பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பு மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. விவசாயிகளையும் விவசாயத் தையும் பாதுகாக்க நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய பெருங்குடி மக்களும் குளித்தலை பகுதி பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.