திருச்சிராப்பள்ளி, நவ.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட 24 ஆவது மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் ஞாயிறன்று சமயபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.வி.எஸ். இந்துராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவ ராஜன், பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சம்பத், கனகராஜ் ஆகியோர் பேசினர். மாநாட்டு வரவேற்பு குழு தலைவ ராக கே.வி.எஸ்.இந்துராஜ், வரவேற்பு குழு செயலாளராக கனகராஜ், பொரு ளாளராக பாலகிருஷ்ணன் உள்பட 55 பேர் கொண்ட வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டு நுழைவு வாயிலுக்கு மறைந்த மூத்த தோழர் சமயபுரம் கே. ராஜப்பா பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக நடந்த படத்திறப்பு நிகழ்ச்சியில் மறைந்த மூத்த தோழர் சமயபுரம் கே.ராஜப்பா வின் உருவப்படத்தை புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் திறந்து வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், பிஎஸ்என்எல் இளங்கோ, சுந்தர்ராஜன் உள்பட பலர், ராஜப்பா உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். ஒன்றி யக் குழு உறுப்பினர் ஜோதிபாசு நன்றி கூறினார்.