districts

img

சிபிஎம் மூத்த தோழர் மைக்கேல் காலமானார்

திருவாரூர், ஜூலை 7- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மூத்த தோழர் மைக்கேல், வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.ஜெய்கிஷ், சி.லோகநாதன் மற்றும் கிளை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.