தஞ்சாவூர், நவ.11 - விவசாய நிலத்திற்குச் செல்லும் நம்பர் 1 வாய்க்காலில் நடைபாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி காவேரி புதுப் பாலத்தில் இருந்து கூட நாணல் வரை புறவழிச் சாலை அமைக்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணிக்கு மருத்துவரை நியமிக்க வேண்டும். கோவில டியில் 50 ஆண்டுகளாக குடியிருந்து, ராய ரால் வெளியேற்றப்பட்டு அவதிப்பட்டு வரும் மக்களுக்கு, இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள மாதா கோவில் தெருவிற்கு கூட்டுக் குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். அகரப்பேட்டை சிவன் கோவி லில் இருந்து சின்ன பானை மேடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தோகூரில் விவசாய நிலத்திற்கு செல்லும் நம்பர் 1 வாய்க்காலில் நடைபாலம் அமைக்க வேண்டும். மைக்கேல் பட்டியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் உடனடி யாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், திருக்காட்டுப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர்.