districts

img

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து சிபிஎம் நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- பலமுறை மனு கொடுத்தும் நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நூதனப் போராட்டம் நடை பெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38,  39, 43 ஆவது வார்டுகள் முழுவதும் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப் பட்ட குழிகளை மூடி புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சேரன் நகரில் தோண்டப்பட்ட ஆபத்தான குழிகளை மூடி புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும். சோழன் நகரில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து உள்ள பூங்காவை சீர் செய்ய வேண்டும். பல லட்சம் செலவு செய்து பூட்டியே  கிடக்கும் பாப்பாகுறிச்சி சமுதாயக் கூடத்தை, உணவுக் கூடமாக அமைத்து  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். காட்டூர் கால்நடை மருந்த கத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். காட்டூர் பகுதியில் சுற்றி திரி யும் நாய், பன்றிகளை பிடித்து அப்புறப் படுத்த வேண்டும். மஞ்சத்திடல் பொது  கழிப்பறையை சீர்படுத்தி, கதவுகளை  சரி செய்ய வேண்டும். காட்டூர் பாப்பா  குறிச்சி செல்லும் வலுவிழந்த ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பலமுறை மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தப்பு அடித்து, சங்கு ஊதும் நூதனப் போ ராட்டம் வெள்ளிக்கிழமை திருச்சி காட்டூர் இளநிலை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்றது. போராட்டத் திற்கு பகுதி குழு உறுப்பினர் செந்தில் குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, பகுதி செயலாளர் மணிமாறன், பகுதி குழு உறுப்பினர்கள் நல்லையா, குமார்  ஆகியோர் பேசினர். பாரதிதாசன் நகர்  கிளை செயலாளர் ஜான்பீட்டர் நன்றி கூறினார்.