districts

img

சிபிஎம் தலைவர் தோழர் உமாநாத் நினைவு தினம் : மாவட்டங்களில் அஞ்சலி

திருவாரூர்,மே.21-  திருவாரூர் மாவட்டம், குட வாசல் ஒன்றியம் ஜி.டி.திருமண அரங்கத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட குழு கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சேகர் தலை மை வகித்தார், கூட்டத்தில் பங் கேற்ற சிபிஎம் மத்தியகுழு உறுப்பி னர் பெ.சண்முகம் அரசியல் விளக்க உரையாற்றினார், நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி,மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்க்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பெ.சண்முகம் கூட்டம் துவங்குவதற்கு முன்ன தாக மாபெரும் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் நினைவு தினைத்தை முன்னிட்டு தோழரின்  உருவப்படத்திற்கு மத்திய குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் மலர் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.அத னைத் தொடர்ந்து தோழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி,மலர் துவி அஞ்சலி செலுத்தினர்.  புதுக்கோட்டை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முது பெரும் தலைவர் தோழர் ஆர்.உமா நாத் அவர்களின் 10-ஆம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு புதுக் கோட்டையில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னிரூபவ், ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிர மணியன், ஆர்.மகாதீர் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;