districts

img

நுண்கடன் நிறுவனம் அவமானப்படுத்தியதால் விவசாயத்தொழிலாளி தற்கொலை

மயிலாடுதுறை, அக்.03- விவசாயத் தொழிலாளி தற்கொ லைக்கு காரணமான நுண்கடன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி மயிலாடுதுறை மாவட் டம், குத்தாலம் சேத்திரபாலபுரம் முக்கூட்டு ( கும்பகோணம் -மயி லாடுதுறை) தேசிய நெடுஞ்சாலை யில்  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  வியாழனன்று மறியல் போராட்டம் நடைப்பெற்றது.                             குத்தாலம் ஒன்றியம் ,கட லங்குடி கீழத்தெருவை சேர்ந்த வர் முனுசாமி(45) இவருக்கு சுதா என்கிற மனைவியும், இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.விவசாய கூலி வேலை செய்து வரும் முனுசாமி நுண்கடன் நிறுவ னங்களான ஐடிஎஃப்சி, ஸ்ரீராம், 5 ஸ்டார் ஆகிய நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார்.இந்நிலையில் கடன் தொகையை குறித்த நேரத் தில் கட்டச்சொல்லி மூன்று நிறு வனங்களும் தொடர்ந்து மிரட்டி தொந்தரவு செய்துவந்துள்ளது.  கடன் தொகையை உடனுக்குடன் கட்டமுடியாத சூழலில் முனு சாமி தவித்து வந்த நிலையில் ஐடிஎஃபி நிறுவன மேலாளர் கடனை உடனே கட்ட முடிய வில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள் இன்சூரன்ஸ் மூலம் பணத்தை எடுத்துக்கொள்கிறோம் என அநாகரீகமாக பேசியதோடு, தாழ்த்தப்பட்டர் என தெரிந்து அவதூறாக பேசி கேவலப்படுத்தி யுள்ளார்.இதனால் மனமுடைந்த முனுசாமி செப்-26 அன்று தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாகவும், நுண்கடன்களை வாங்காதீர் எனவும், தன்னையும், தனது குடும்பத்தையும் நுண் கடன் நிறுவனங்கள் மிக கேவலப் படுத்திவிட்டதாக வேதனையுடன் கூறி வீடியோ ஒலி ,ஒளி பதிவாக பதிவிட்டு வைத்து விஷமருந்தி யுள்ளார். உடனடியாக முனுசா மியை மயிலாடுதுறை அரசு மருத்து வமனையில் சேர்த்துள்ளனர்.மேல்சிகிச்சைக்காக பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ,மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைய ளிக்கப்பட்ட நிலையில் புதனன்று மாலை சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தார். 

நுண்கடன் நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை 

நுண் கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நீதிக்கேட்டும், தற்கொலைக்கு காரணமான நிறுவ னத்தின் மேலாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதோடு, தலித் சமூகத்தை சேர்ந்தவர் என  தெரிந்து கேவலப்படுத்திய பேசி யதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றும் , தற்கொலை க்கு காரணமான நிறுவனங்களு க்கு ஆதரவாக செயல்படும் குத்தா லம் காவல்நிலையத்தை கண்டித் தும் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலை மை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள்  ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ் ஆகியோர்  கண்டன உரையாற்றினர். ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.ரவி, டி.துரை க்கண்ணு(மயிலாடுதுறை நகர செயலாளர்), கே.கேசவன், அசோகன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ,குத்தாலம் வைரவன்,ராமகுரு உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி னர். தொடர்ந்து 4 மணி நேரம் போராட்டம் நடந்தும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லா மல் காவல்துறையும், வருவாய்த் துறையும் நுண்நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு போராடிய தலைவர்களை அடாவடித்தனமாக காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்க ளை கைது செய்ததைக் ்கண்டித்தும், தற்கொலை செய்துக் கொண்ட முனுசாமியின் இறப்புக்கு நீதிகேட்டும் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்டது.நுண் நிறுவனங்களின் அடாவ டித்தனத்தால் ஏற்பட்ட தற் கொலை சம்பவம் மாவட்டம் முழுவ தும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.