districts

img

இளம்பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது

தஞ்சாவூர், ஆக.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாப்பா நாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பி.எஸ்.சி., பட்டதாரி பெண் ஒருவர்,  சென்னையில் உள்ள தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வரு கிறார்.  இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, இந்த இளம் பெண் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், தெற்கு  கோட்டை பகுதியைச் சேர்ந்த கவி தாசன் (25) என்பவர் இளம் பெண்ணை மிரட்டி அழைத்துச் சென்று, அவரது நண்பர்களான பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பே ரும் அப்பெண்ணை கும்பல் பாலியல்  வன்கொடுமை செய்துள்ளனர். உடைந்த பீர் பாட்டில் மற்றும்  கத்தியை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நிலையில், ஒரு வர் அதனை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இது தொ டர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவு களின்கீழ் வழக்கு பதிந்து, கவி தாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17  வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை யும் கடந்த செவ்வாயன்று கைது செய்தனர்.

 மேலும், பாதிக்கப்பட்ட பெண்  தஞ்சை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு துணை  காவல் கண்காணிப்பாளர் சஹ்னாஸ் ஆகியோர் இளம் பெண் ணிடம் நேரில் விசாரணை நடத்தி உள்ளனர்.  சிபிஎம் - மாதர் - வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்  பாதிக்கப்பட்ட இளம் பெண் ணுக்கு நீதி வழங்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப் பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் பாப்பாநாடு கடைவீதியில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிபிஎம் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் என்.சுரேஷ்குமார்,  பி.செந்தில்குமார், எஸ்.தமிழ்ச் செல்வி, என்.சரவணன், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் இ.வசந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை. ஏசுராஜா, சிபிஎம் பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் ஒரத்தநாடு சிபிஎம், மாதர், வாலிபர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்குக்கு வலுசேர்க்க நடவடிக்கை: எஸ்.பி. பேட்டி

இதுகுறித்து மாவட்டக் காவல்  அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் அவர் புதன்கிழமை இரவு தெரிவித்ததாவது: பெண்ணைக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை  சம்பவம் நிகழ்ந்த 24 மணிநேரத்தில்  7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளோம். இதேபோல, நிகழ்விடத்தில் விசாரணை செய்து, சாட்சிகளைக் கண்டறிந்து வரு கிறோம். அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் 13 ஆம்  தேதி சேர்க்கப்பட்டார்.  மேலும், அப்பெண்ணிடம் சம்ப வம் குறித்து முழுமையான தகவல் களைச் சேகரித்து, இந்த வழக்குக்கு வலு சேர்க்க நடவடிக்கை எடுக்கிறோம். ஒரத்தநாடு உதவிக் காவல் கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் உள்ளிட்டோர் நிகழ்வி டத்தில் தடயங்கள் சேகரித்து,  ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள் ளனர். இவை அனைத்தும் ஆவ ணப்படுத்தப்படுகின்றன. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் விசா ரணை நடத்தி வருகிறோம்.   இந்த வழக்குக்கு வலு சேர்ப்பதற்கான முழு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு விரைவில் தண் டனை பெற்றுத் தருவதே எங்களது நோக்கம். இவர்களில் முக்கிய நபரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நலமாக இருக்கிறார். இவருக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சை, மனநல  ஆலோசனை அளிக்கவும் தயாராக இருக்கிறோம். இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது நபர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. இவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர். கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சா பயன்படுத்தவில்லை என்பது விசா ரணையில் தெரிய வந்தது. ஆனால், 3 பேர் மது போதையில் இருந்துள்ள னர். நான்கு பேரும் மருத்துவப்  பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவ தால், அதன் மூலம் மேலும் தகவல் கிடைக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.