districts

img

மருதங்கோட்டில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

அருமனை, ஜன.17- குமரி மாவட்டம் மருதங்கோடு ஆபிரகாம்  நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சார்பில்  7 நாட்கள் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமில் ஆளூமை வளர்ச்சி, ஊராட்சிப் பகுதியில் தூய்மைப்பணி கள், விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடை பெற்றன.  மருதங்கோடு ஊராட்சி அலுவல கம் முன் தொடங்கி கழுவன்திட்டை சந்திப்பு வரை பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து விழிப்புணர்வை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவர் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் வினோத் வரவேற்றார. ஆசிரியர்கள், ஊராட்சி உறுப்பினர் செல்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் தூத்துக்குடி  மாவட்டக் கல்வி அலுவலர் பிரபகுமார் கருத்துரை யாற்றினார்.  மாணவர்களுக்கு பிளாஸ்டிக்  மறுசுழற்சி,மண் புழு உரம் தயாரித்தல் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப் பட்டது.