districts

img

எதிர்காலங்களில் மதுரை மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 27- இனிவரும் காலங்களில் மதுரை  மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்  ணிக்கை மையமாக பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். வேறு கட்டி டங்களை பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் இந்தியத்  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்  டுள்ளது. கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் எம்.ராஜா முஹமது, துணைத்  தலைவர் பி.யாளினி, பொதுச் செய லாளர்கள் ஆல்வின் ஜான், ஜே. அனாமிகா, ஆண்கள் விடுதி பொதுச்  செயலாளர் யு.எஸ்.கமலேஷ், மக ளிர் விடுதி பொதுச் செயலர் ஸ்வர்ண ரேகா ஆகியோர் தாக்கல் செய்த ரிட்  மனுவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ர வர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் சரவணன், வாக்கு எண்  ணும் மையமாக உள்ள மருத்துவக் கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்தில் நோயியல் ஆய்வகம், உடற்கூறியல்  துறை, நூலகம் ஆகியன இருப்ப தால் மாணவர்களின் கல்வி பாதிக்  கப்படுகிறது. மேலும் அன்றாடம் நடைபெறும் நிர்வாக நடவடிக்கை கள் முடங்குவதாக தெரிவித்தார். இந்தியத் தேர்தல் ஆணையத் தின் ஆலோசகர் நிரஞ்சன் ராஜ கோபாலன் கூறுகையில், மதுரை  மருத்துவக் கல்லூரி 1998- ஆம்  ஆண்டு முதல் வாக்கு எண்ணும் மையமாக செயல்பட்டு வருகிறது. வாக்குப் பெட்டிகளை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பதற்கும், வாக்கு எண்ணுவதற்கும் ஏற்ற இடம் என்ப தால் மருத்துவக் கல்லூரியை பயன்  படுத்துகிறோம் என்றார்.  மேலும், இந்தாண்டு நாடாளு மன்றத் தேர்தலுக்கான வாக்கு  எண்ணும் மையத்தை மாற்ற மதுரை  நகரில் உள்ள அமெரிக்கன் கல்லூரி,  உலகத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட 12  கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததாகவும், ஆனால் அவை எதுவுமே அதற்கு ஏற்றதாக இல்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், இனி வரும் காலங்களில் மதுரை  மருத்துவக் கல்லூரியை வாக்கு  எண்ணும் மையமாக பயன்படுத்தா மல் இருக்க வேண்டும். ஒரு மாதத்  திற்கும் மேலாக கல்லூரிக் கட்டி டத்தைப் பயன்படுத்துவதால் மாண வர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்று  மாணவர் தலைவர்கள் கூறியதை  ஏற்றுக்கொள்கிறோம். எதிர்காலத்  தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை  மாற்ற பரிசீலிக்கவேண்டுமென நீதி பதிகள் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.