தஞ்சாவூர், செப்.23- தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 31 ஆம் பட்டமளிப்பு விழா நடை பெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுச்சாமி வர வேற்றார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டட எழிற்கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை புலங்க ளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 829 மாண வர்கள், 410 மாணவியர்கள் என மொத்தம் 1,239 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இதில் 6 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் இவ்வாண்டின் தரவரிசையில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 100 ஆகும். 37 தங்கப் பதக்கமும், 33 வெள்ளிப் பதக்கமும், 30 வெண்கலப் பதக்கமும் விழா மேடையில் அணி வித்து பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.