நாமக்கல், ஜன.13- கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங் கல் பரிசு தொகுப்பு வழங்க வலியுறுத்தி சிஐ டியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆண் தொழி லாளர்களுக்கு வேட்டி துண்டு, பெண் தொழிலாளர்களுக்கு சேலை ஜாக்கெட் வழங்க வேண்டும். மழைக்காலத்தில் வேலை இழந்த கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு வேலை இழப்பு நிவாரணத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கலாம் என கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் முடிவு செய் யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது. நல வாரியத்தில் ரூ.4 ஆயிரம் கோடி பணம் இருந்தும், கடந்த காலத்தில் நிறை வேற்றிய திட்டங்களை நிறுத்துவதாலும், கடந்த அரசு அறிவித்து கிடப்பில் போட்டத் திட்டங்களை சரியான முறையில் கொண்டு சேர்க்காத நிலையில் அரசு மீது மக்க ளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு.சிவ ராஜ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி. குமார், சிஐடியு மாவட்ட தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செய லாளர் ரமேஷ், மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.