மன்னார்குடி, பிப்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர முன்னாள் செயலா ளர் தோழர் எஸ்.ஆறுமுகம் காலமா னார். அவருக்கு வயது 57. நீண்ட காலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பல னின்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப்.12 அன்று காலமானார். தோழர் எஸ்.ஆறுமுகம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் கட்சியின் பல்வேறு பொறுப் புகளையும், வாலிபர் சங்க பொறுப்பு களையும் திறம்பட நிறைவேற்றியவர். அவரது மறைவுச் செய்தி அறிந்து, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சியின் மூத்த தோழர் எஸ்.தங்கராசு, மாவட்ட செயற் குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறு முகம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதன்கிழமை அன்னாரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் ஆறுமுகத்திற்கு மனைவி மைதிலியும் மகன் ராகுலும் உள்ளனர்.