districts

தோழர் பி.என். தங்கராசு: ஓர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றில் துவக்கப் புள்ளியாக விளங்கிய திருத்துறைப்பூண்டி தாலுகா, நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகபுரம் கிராமத்தில் 1947ஆம் ஆண்டு நாகூரான் -  பிச்சையம்மாள் என்ற விவசாயக் கூலித்  தொழிலாளர் தம்பதியினருக்கு மகனாகப்  பிறந்தார் பி.என். தங்கராசு. திருத்துறைப் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி வரை கல்வி பயின்ற இவர், இளமைக் காலத்திலேயே தேசப்பற்று மிக்க இளைஞராகத் திகழ்ந்தார். நெடும்பலம் பகுதியில் வக்கீல் வரதன், ராஜமாணிக்கம், தாயுமானவன், ரமணி  ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் இயக்கத்தில் தனது அரசியல் பயணத் தைத் துவங்கினார். 1961களில் கீழத்தஞ்சை  பகுதி முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி நில மற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக் காக நடத்திய தீவிர நில சீர்திருத்தப் போராட்டங்களின் தாக்கமும், மகத்தான தலைவர் பி. சீனிவாச ராவ் அவர்களின் மறைவும் (1962 செப்டம்பர் 30) இவரை கம்யூனிஸ்ட் சிந்தனையின் பால் ஈர்த்தது. இதன் விளைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1975 வரை தீவிர இயக்கப் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் திருத்துறைப் பூண்டியில் ஒரு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த மாற்றம் நிகழ்ந்தது. எம்.பி. கண்ணுசாமி தலைமையில் பத்தாயி ரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் பி.என்.டி இணைந்தார். மாநிலச் செயல ாளர் ஏ. பாலசுப்பிரமணியன், எம்.பி.  கண்ணுசாமி, அஞ்சப்பன், கே. சின்னை யன், ஜெகநாதன், என்.எஸ். கோவிந்த சாமி பிள்ளை, அரவிந்தசாமி தாயார், டி.  வடிவேல், கள்ளிக்குடி எம். மாணிக்கம், வங்கநகர் எம்.ஆர். ராசு, சேகல் அஞ்சான்  நடராசன், நெடும்பலம் அருணாச்சலம், ஒலிமுகமது உள்ளிட்ட பல முக்கியத் தலை வர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1979ஆம் ஆண்டில் திருத்துறைப் பூண்டி தாலுகா விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளராக பொறுப் பேற்று, தோழர் வேயண்ணா அவர்களு டன் இணைந்து தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டார். 1981இல்  திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் பி.எஸ்.  தனுஷ்கோடி மாநிலத் தலைவராக வும், பெரி. குமரவேல் மாநிலச் செயலாள ராகவும் தேர்வு செய்யப்பட்டபோது, பி.என்.டி மாநில குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1980ஆம் ஆண்டின் சித்தாய்மூர் அறுவடை கூலிப் போராட்டம், 1989இல் நடைபெற்ற சேகல், எழிலூர் அறுவடை கூலிப் போராட்டங்கள், 1985இல் மேல  கொர்க்கை வழக்கு என பல முக்கியப் போராட்டங்களில் முன்னணிப் பங்காற்றி னார். குறிப்பாக மேல கொர்க்கை வழக்கில் 60 தோழர்கள் மீது பொய் வழக்கு  போடப்பட்டு, 14 பேருக்கு தூக்குத் தண்டனை  விதிக்கப்பட்டபோது, கட்சி வழக்கறிஞர் பி.ஆர். வைகை அவர்களின் சிறப்பான வாதத்தால் தண்டனை குறைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டில் திருத்துறைப் பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்ட பி.என்.டி, 19,336 வாக்குகள் பெற்று  மூன்றாம் இடம் பிடித்தார்.  தோழர் ஜானகி அம்மையாரை மணந்தார். சுபாஷ் சந்திரபோஸ் என்ற மகனைப் பெற்றெடுத்தார். பி.என்.டி, எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். 76 ஆண்டுகால வாழ்வில்  40 ஆண்டுகளை பொது வாழ்விற்கு அர்ப்பணித்த இவர், டிசம்பர் 26, 2023  அன்று மறைந்தார். உழைக்கும் மக்களின்  உரிமைக்காகப் போராடிய தளபதியாக வும், எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திர மாகவும், பல தலைவர்களை உருவாக்கிய  ஆசானாகவும் வாழ்ந்து மறைந்த பி.என்.டி  அவர்களின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. ஆறு.பிரகாஷ்  மாவட்டத் தலைவர்,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்.