கும்பகோணம், டிச.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில், நவரத்தி னங்களில் ஒருவராக திகழும் பி.ஆர் என்று அழைக்கப்படும் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினத்தை யொட்டி, (டிச.15) தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவர் வாழ்ந்த ஊரான வேப்பத்தூர் கிரா மத்தில் வீரவணக்க நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில், வேப்பத் தூரில் தோழர் பி.ஆர். வாழ்ந்த இல்லத்தில் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை. பாண்டியன் செங்கொடியை ஏற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றிய அலுவலகமான தோழர் பி.ஆர்.நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என்.சீனிவாசன் செங்கொ டியேற்றி தோழர் பி.ஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களின் ஒருவ ரான மக்கள் போராளி தோழர் பி.ராம மூர்த்தி 37 ஆம் ஆண்டு நினைவு தினம் குடவாசலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. தோழர் பி.ராமமூர்த்தியின் உருவப் படத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் வர்க்க வெகுஜன அரங் கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.