கரூர், மார்ச் 9 - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், ஞாயிறன்று கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், அட்லஸ் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் சீர்வரிசைப் பொருட்களையும் மற்றும் 98 மகளிருக்கு ரூ.1.18 கோடியில் 784 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கினார். விழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) சுவாதி, துணை மேயர் ப.சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.