தஞ்சாவூர், மே 4 - மலேயா தொழிலாளர் கள், தமிழர்களின் உரி மைகளுக்காக பாடுபட்ட தோழர் மலேயா கணபதி யின் 75 ஆவது நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை, முக்கூட்டு சாலை, மலேயா கணபதி நினைவு ஸ்தூபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றி யத் தலைவர் மகாலிங்கம், மூத்த தோழர் மெரினா ஆறு முகம் மற்றும் கட்சி நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.