districts

img

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி திமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், இலுப்பூர், செம்பனார்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  திருக்கடையூரில் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில், தில்லையாடி வள்ளியம்மை நினைவு நுழைவு வளைவு அருகிலிருந்து அமைதி பேரணியாக புறப்பட்டு, திருக்கடையூர் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.