districts

‘ஒரு பவுனுக்கு ரூ.1500 தருவதாகக் கூறி 3 ஆயிரம் பவுன் நகைகளை ஏமாற்றிய பெண்

மயிலாடுதுறை, டிச.31- மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி என்பவரின் மனைவி பாத்திமா நாச்சியார் (42). இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மயி லாடுதுறை சீனிவாசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்க நகை பாதுகாப்பு நிறு வனத்தை நடத்தி வந்துள்ளார். தனது நிறுவனத்தில் ஒரு சவரன் நகைக்கு ரூ.1500 தருவதாகவும், 15 நாட்க ளில் நகையை திருப்பிக் கொடுத்து விடுவ தாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி புங்க னூர் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீது  என்பவரின் மனைவி மஜிலாபானு தன்னு டைய 502 சவரன் நகையை பாத்திமா நாச்சியா ரிடம் கொடுத்துள்ளார். இதனையறிந்து, பல  பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள்  தங்களது நகைகளை, பாத்திமா நாச்சியாரி டம் கொடுத்து பணம் பெற்றுள்ளனர்.  முதல் 3 மாதங்களுக்கு பாத்திமா நாச்சி யார் சொன்னபடி நகைகளை கொடுத்த வர்களிடம் 15 நாட்களில் நகைகளை திருப்பி  கொடுத்துள்ளார். பின்னர் நகைகளை கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைகளை கொடுத்த பெண்கள், தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து பாத்திமா நாச்சியார் கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டிற்கு குடி  பெயர்ந்து உள்ளார். 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நகை திரும்ப கிடைக்காததால் மஜிலாபானு டிசம்பர் 24-ஆம் தேதி  தனது நகையை மீட்டு தரக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் சீர்காழி காவல்துறை யினர் பாத்திமா நாச்சியாரை விசாரணைக்கு அழைத்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அவர் விசாரணைக்காக சீர்காழி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.  இதனை அறிந்து பாத்திமா நாச்சியா ரிடம் நகைகளை கொடுத்து ஏமாற்றமடைந்த  ஏராளமான இஸ்லாமிய பெண்கள் சீர்காழி காவல்நிலையத்தில் திரண்டனர்.  பின்னர் காவல்துறையினரின் அறி வுறுத்தலின்படி பாத்திமா நாச்சியாரிடம் இருந்து 3042 சவரன் தங்க  நகைகளை மீட்டு  தர கோரி 15 இஸ்லாமிய பெண்கள் புகார்  அளித்தனர். இதுகுறித்து சீர்காழி காவல் துறையினர் பாத்திமா நாச்சியாரிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.