districts

img

சாம்சங் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையை தடுக்கும் காவல்துறையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அக் 10  சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் களின் நியாயமான போரா ட்டத்தை ஆதரித்தும், இரவு நேரங்களில் தொழிற்சங்க தலைவர்களை வீடு புகுந்து கைது செய்த காவல்துறை யின் அராஜகத்தை கண்டித் தும், கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கும்பகோணம் மண்டல அரசு போக்கு வரத்து தொழிலாளர் சம்மே ளன பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி திருநாவுக் கரசு, மாமன்ற உறுப்பினர் ஏ.செல்வம், ஆட்டோ சங்க  கௌரவத் தலைவர் செந்தில் குமார், எவர்சில்வர் சங்க தொ ழிலாளர் சங்க தலைவர் மணி உள்ளிட்டோர் பேசினர். கரூர்   சாம்சங் தொழிலாளர்கள் மீது காவல் துறையின் அடக்குமுறைக்கு கண்ட னம் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும் சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.முருகே சன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், கரூர் மாமன்ற உறுப்பினர் எம்.தண்டபாணி, இந்துமதி (மாதர் சங்கம்), கே.சத்தி வேல் (மாற்றுத் திறனாளி கள் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  திருவாரூர் திருவாரூர் பழைய பேரு ந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆறு. பிரகாஷ் ஆகியோர் தலை மை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா மற்றும் இரு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர்.  சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.