திருச்சிராப்பள்ளி, டிச.11 -ஒன்றிய மோடி அரசு பெட்ரோல், டீசல் மீது 270 சதவீத கலால் வரி விதிப்பே பெட் ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. மேலும் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் தற்போது குறைந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு விலையை குறைக்க மறுக்கிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய வாகன நிறுத் தப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி மாநகரில் 13 மையங்களில் 10 நிமிடம் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ஜங்ஷன் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், பிஎஸ்என்எல் இயூ மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், ஆட்டோ சங்கத்தின் பக்ரு தீன்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பகுதி யில் சீனிவாசன், கருணாநிதி, செல்வராஜ் தலைமையிலும், காந்தி மார்க்கெட்டில் ராமர், வரிசை, சுரேஷ் தலைமையிலும், திருச்சி அரசு மருத்துவமனை அருகில் சந்திரன், ராமச்சந்திரன் தலைமையிலும், திருவானைக்காவல் பகுதியில் ரகுபதி, ஜெய் தலைமையிலும், திருவெறும்பூர் கடைவீதி யில் வி.கே. ராஜேந்திரன், கணேசன் தலை மையிலும், காட்டூர் கடைவீதியில் தங்க துரை, ரேணுகா தலைமையிலும், கரு மண்டபம் பகுதியில் ஜெயபால், மருதராஜ், சேதுபதி தலைமையிலும், புதுக்கோட்டை ரோடு பகுதியில் மகேந்திரன், மணிமாறன், சரஸ்வதி தலைமையிலும், ஸ்ரீரங்கம் பகுதி யில் வீரமுத்து, வெற்றிச்செல்வன், சந்துரு, தலைமையிலும், எஸ்.ஐ.டி அரியமங்கலம் அருகில் செல்வி, லெனின், சார்லஸ் தலை மையிலும், சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் மணி கண்டன், முகேஷ் தலைமையிலும், எட மலைப்பட்டிபுதூரில் சந்திரசேகர், சேது தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு, வாலிபர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், போக்குவரத்து, பிஎஸ்என்எல் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம், திருவா னைக்காவல், காந்தி மார்க்கெட், எஸ்ஐடி, புதுக்கோட்டை ரோடு, கருமண்டபம் பகுதி யில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப் பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிஐடியு புறநகர் மாவட்ட குழு சார்பில் திருச்சி புறநகரில் 12 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. மண்ணச்ச நல்லூர் கிழக்கு மற்றும் மண்ணச்சநல்லூர் மேற்கில் சிஐடியு புறநகர் மாவட்ட செயலா ளர் சிவராஜ், கனகராஜ், லிங்கராணி ஆகி யோர் தலைமையிலும், மணப்பாறையில் நவமணி, ஷாஜகான் தலைமையிலும் துறையூரில் ஆனந்தன், கணேசன் தலை மையிலும், பிஎச்இஎல்-ல் பிரபு தலைமையி லும், தா.பேட்டையில் பாண்டியன் தலைமை யிலும். வையம்பட்டியில் வெள்ளைச்சாமி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. குடவாசல் குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் முன்னிலை வகித்தார்.
குடவாசல்
குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் முன்னிலை வகித்தார்.
செங்கிப்பட்டி
பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டி யில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசா யிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழரசன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.