districts

img

செம்பனார்கோவில் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள்

மயிலாடுதுறை, பிப்.1-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் ஆக்கூர், பிள்ளை பெருமாநல்லூர், திருக்கடையூர், மேமாத்தூர், இலுப்பூர் ஆகிய ஊராட்சிகளில்  ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து 150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 50 பயனாளிகளுக்கு சிட்டா நகல்களையும் 25 நபர்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டையையும், 45 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையையும், 20 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.