திருவில்லிபுத்தூரில் குருத்தோலை பவனி மறைவட்ட அதிபர் சந்தன சகாயம் அடிகளார் தலைமையில், சிஎஸ்ஐ தேவாலய சபை குரு எஸ்.பால் தினகரன் முன்னிலையில் ஞாயிறன்று நடைபெற்றது. ஊர்வலம் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நிறைவு பெற்றது. திரு இருதய ஆண்டவர் ஆலய உதவி பங்குத்தந்தை செல்வநாயகம், அருட் சகோதரிகள் மற்றும் பங்குவிற்கு உட்பட்ட இறைமக்கள் கலந்து கொண்டனர்.