districts

img

தா.பேட்டை மக்களுக்கு தினமும் காவிரி குடிநீர் வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, பிப்.15 - தா.பேட்டை பேரூராட்சி மக்களுக்கு தின மும் காவிரி குடிநீரை வழங்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள் கையை கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்தை அனைத்து கிராமத்திற்கும் வழங்க வேண்டும். சம்பள பாக்கியை உடனே  வழங்க வேண்டும். தா.பேட்டை ஒன்றியத்தில் ஜல் ஜீவன்  திட்டத்தில் குடிநீர் இணைப்பை அனைத்து கிரா மத்திற்கும் முறையாக வழங்க வேண்டும். ஒன்றியத்தில் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளை போக்கிட குரங்குகளை பிடித்து  வனப்பகுதிகளில் விட வேண்டும். தா.பேட்டை பேரூராட்சியில் காவிரி குடிதண்ணீர் 10 நாட் களுக்கு ஒருமுறை வருவதை தினந்தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி  தா.பேட்டை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியச் செயலா ளர் எம்.வீரவிஜயன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஜே.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாண்டியன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சேகர், சிஐடியு ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் சங்க ஒன்றியத் தலைவர் மரகதம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகுமார், ஒன்றியத் தலைவர் செல்லப்பெருமாள், பொரு ளாளர் ரங்கராஜ், சிஐடியு ஒன்றியக் குழு உறுப்பி னர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.