அறந்தாங்கி, ஜன.7 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாபெரும் வணிக கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களால் நடத்தப்பட்ட இக்கண்காட்சியை பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமையில், சிறப்பு விருந்தினர் புதுக்கோட்டை ஆடிட்டர் கார்த்திக் துவக்கி வைத்தார். ரோட்டரி மருத்துவர்கள் இராமகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திப் பேசினார். அறந்தை ரோட்டரி ப்ரண்ட்ஸ் கிளப் தலைவர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் உஷா கீதப்பிரியா நன்றி கூறினார்.