districts

வீரமலைப்பாளையம்  துப்பாக்கிச் சுடும் இடத்தில் மனிதர்கள், கால்நடைகளுக்கு தடை

திருச்சிராப்பள்ளி, ஏப்.24 - திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் இடத்தில் ஏப். 26 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை  மற்றும் மே 15 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை உள்ள  தினங்களில், காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி  வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை, துப்பாக்கிச்  சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித  நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் பயிற்சி தளத்தில்  எவரும் பிரவேசிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சிவராசு  தெரிவித்துள்ளார்.