districts

img

நாகர்கோவிலில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம்

நாகர்கோவில், மார்ச் 4- 19-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் இந்தியாவின் தென் முனையில் சமூக சிந்தனையை பரப்பியதோடு, சமூகத்தின் அடித் தட்டு மக்களை ஒன்றுபடுத்தி,  அடிமைத்தனத்தை உருவாக்கிய மனுதர்மவாதிகளின் ஆதிக்கச் செயலை முறியடித்து, மக்க ளால் அவதார புருசராக போற்றப் பட்டவர் அய்யா வைகுண்டர். தீண்டாமையை ஒழிக்கும் வகை யில் அந்த காலத்திலேயே ‘சமபந்தி’ விருந்து நடைபெற கார ணமாக இருந்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர், சமூகநீதியை நிலை நாட்ட பாடுபட்டவர், சுரண்டலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர், கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் அய்யா வைகுண்டர். சமய சீர் திருத்தவாதியாக, சமூக நெறி யாளராக, பொருளாதார மேன்மை க்கு வழி சொல்லும் வித்தகராக, மக்களிடையே சமத்துவம் காண துடித்த மனிதாபிமானியாக அய்யா  வைகுண்டர் ஆற்றிய பெரும் பணிகள் ஏராளம்... ஏராளம்... அவரது 191-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டா டப்பட்டது. முன்னதாக அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து வெள்ளிக்கிழம தொடங்கிய வாகனப்  நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பால ஜனாபதி தலைமை வகித்தார். முன்னதாக சாமித் தோப்பு தலைமை பதியிலிருந்து மகாதீபம் கொண்டு வரப்பட்டு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் ஏற்றப் பட்டது.  சனிக்கிழமை அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து புறப்பட்ட அவதார தின ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தன்காடு வழி யாக சாமிதோப்பில் நிறைவ டைந்தது, இதில் பால ஜனாபதி, கன்னியாகுமரி தொகுதி மக்க ளவை உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர்.  பந்தக்காட்சியுடன் நம்பெரு மாள் வீதி உலா வெற்றிலை, பாக்கு, பழம் என சுருள் வைத்து பல  இடங்களில் வரவேற்பளிக்கப் பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற வர்களுக்கு வழிநெடுக மோர், குளிர்பானம், பானகரம் வழங்கப் பட்டது. சாமிதோப்பு தலைமை  பதியை ஊர்வலம் சென்ற டைந்ததும் அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் பங்கேற்க கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் சாமித்தோப்பில் திரண்டிருந்தனர். சாமிதோப்பு பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள், நிழல் தாங்கல்களிலும் அய்யா அவதார தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் இந்திய மாணவர் சங்கத்தின் பறக்கை கிளை சார்பாக ஊர்வலத்தில் பங்கேற்றவர்க ளுக்கு மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளைத் தலைவர்  சந்தோஷ், மாவட்டத் துணைச் செயலாளர் சந்துரு, முத்து சிவம், விக்னேஷ்  ஆகியோர் பங்கேற்ற னர். ஈத்தாமொழியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளிர்பானம் வழங்கப்பட்டது. அய்யா வைகுண்டர் பாரம்பரிய பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் மோர் மோர் வழங்கப்பட்டது.