அரியலூர், செப்.22 - ஆன்-லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென அரியலூரில் நடந்த ஆட்டோ தொழிலாளர் சங்க முதல் மாநாடு வலி யுறுத்தி உள்ளது. அரியலூரில் ஆட்டோ தொழிலாளர் சங்க முதல் மாநாட்டுக் கூட்டம் எஸ்.டி.மேரி திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி தொடங்கி வைத்து உரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலாளர் எஸ்.மணிகண்டன் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், ஆட்டோ தொழிலா ளர்கள் மீது விதிக்கப்படும் ஆன்-லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 2013 இல் அறிவிக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்து அறிவிக்க வேண்டும். மாற்றி அமைக்கப்பட்ட மீட்டர் கட்டணம் அடிப்படையில் ஆட்டோ செயலியை தமிழக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். கட்டுமான நலவாரியம் போல் அனைத்து நல வாரியங்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதன்படி, மாவட்டத் தலைவராக மீன்சுருட்டியை சேர்ந்த கே.ஆர்.செந்தில் குமார், மாவட்டச் செயலாளராக எ.சத்திய மூர்த்தி, பொருளாளராக எம்.ராமசாமி, கௌரவத் தலைவராக கே.கிருஷ்ணன், துணைத் தலைவர்களாக ஜெயங்கொண் டம் ராஜேந்திரன், சோழன் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச் சங்க செயலாளர் ஆர்.சரவணன், மீன்சுருட்டியைச் சேர்ந்த எம்.ரமேஷ், துணைச் செயலாளர்களாக திருமானூர் அம்பேத்கர், வி.கைகாட்டி எஸ்.இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநாட்டில், அரியலூர், திருமானூர், மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஆட்டோ சங்கத்தினர் கலந்து கொண்டனர்.