districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆக.30 தஞ்சாவூரில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஆக.26 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் ஆக.30 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்த்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனை வரும் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்க லாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள்  பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10  மணி வரை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று,  பின் மனுக்களை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

லிப்ட் கொடுப்பது போல் அழைத்து  மூதாட்டியிடம் நகை பறிப்பு

தஞ்சாவூர், ஆக.26 -  லிப்ட் கொடுப்பது போல் மோட்டார் சைக்கிளில் மூதாட்டியை அழைத்துச் சென்று, அவர் அணிந்திருந்த நகையை மர்ம நபர் பறித்துச் சென்றார். தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலை மகேஷ் நகரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மனைவி  குயிலம்மாள் (80). இவர் கடந்த ஆக.24 அன்று புள்ளவராயன்குடிக்காட்டில் உள்ள தனது பேத்தி வீட்டுக்குச் சென்று தங்கினார். பின்னர் சனிக்கிழமை மாலை அங்கிருந்து பேருந்தில் ஏறி புன்னைநல்லூர் மாரி யம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவில்  சர்வீஸ் ரோட்டில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந் தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு  மர்ம நபர் குயிலம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும், நான் அங்கு உங்களை இறக்கி விடுகிறேன் என  சாதுர்யமாக கூறினார். அதற்கு குயிலம்மாள் சற்று தயங்கி னார். இருந்தாலும் அந்த நபர் விடாப்பிடியாக குயிலம் மாளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். மோட்டார் சைக்கிள் மருங்கை ரோட்டில் சென்ற போது சந்தேகமடைந்த குயிலம்மாள் இது வேறு வழியாக  உள்ளதே என கேட்டார். அதற்கு அந்த நபர் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கியபடி, மருங்கை பகுதியில்  ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான இடத்தில் மோட்டார்  சைக்கிளை நிறுத்தினார். இதனால் பயந்த குயிலம்மாள் திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அப்போது அந்த  நபர் கத்தியை காட்டி மிரட்டி குயிலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து அவர் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வரு கின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து  19 பவுன் நகை திருட்டு

தஞ்சாவூர், ஆக.26-  தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு ராஜா நகரைச் சேர்ந்தவர் செய்யதுமீரான். இவரது மனைவி பத்மாகனி (48). இவர் வீட்டை பூட்டி விட்டு திருவாரூரில் உள்ள உற வினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 19 பவுன் தங்க  நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கள்ளப்பெரம்பூர் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில்  காவல்துறையினர் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி  வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்  பரவாமல் தடுக்க நடவடிக்கை: ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.26 -  தஞ்சாவூர் மாவட்டத்தில், ‘ஏடிஸ்’ கொசு வகையால் ஏற்படும் டெங்கு காய்ச்சல்  பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல்  பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் கொசு ஒழிப்புப் பணி களை தீவிரப்படுத்த வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு காய்ச்சல், உடல்  சோர்வு உள்ளிட்டவை இருந்தால், உடனடி யாக மருத்துவர்கள் பரிந்துரைப்படி சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்து வத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் சுற்றுப் புறத்தை தூய்மையாக பராமரித்து, டெங்கு  கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் வீட்டின் அருகாமையில் தேங்காய் ஓடுகள், அகல் விளக்குகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக்  சாமான்கள் உபயோகமற்ற டயர்கள் ஆகிய வற்றை அகற்றிட வேண்டும்.  மருத்துவரின் அறிவுரைப்படி, நிலவேம்பு  கசாயம் மற்றும் பப்பாளிச்சாறு ஆகிய வற்றை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு  சக்தி அதிகரிக்கும். வீட்டில் கொசுக் கடியி லிருந்து பாதுகாத்து கொள்ள ஜன்னலில் கொசு வலையை பயன்படுத்தவும். குழந்தை கள் வீட்டில் தூங்கும் போது கொசு கடிக்கா மல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடை மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தும் உணவு மற்றும் நீர் கலன்களில் கொசுப்புழு உருவாகாத வண்ணம் பராமரித்திடவும், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான அதிகப் படியான காய்ச்சல், கடும் தலைவலி, பசி யின்மை, மூட்டுவலி, உடல் சோர்வு, கண்ணின் பின்பகுதியில் உண்டாகும் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை மேற்கொள்ளவும் வேண்டும்.  காய்ச்சலின் போது களைப்பு ஏற்படு வதை தவிர்த்திட, நீர்ச்சத்து அதிகம் உள்ள  ஓ.ஆர்.எஸ் திரவம், அரிசி கஞ்சி, பழச்சாறு,  இளநீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள  வேண்டும். மேலும், நீரினால் பரவும் நோயான  டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்களை தவிர்த்திட மழைக்காலங்களில் காய்ச்சி கொதிக்க வைத்து வடிகட்டிய குடிநீரை பயன் படுத்த வேண்டும்.  உணவு உண்ணும் முன்னரும், பின்ன ரும் மற்றும் கழிவறை சென்று வந்த பின்னரும்  கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ  வேண்டும். எனவே மேற்கண்ட நடைமுறை களை பின்பற்றி நலமுடன் வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட்டுக்கோட்டையில்  600 கிலோ புகையிலைப்  பொருட்கள் பறிமுதல்

தஞ்சாவூர், ஆக.26 -  பட்டுக்கோட்டையில் 600 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஒரு வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலை யம் அருகே ஞாயிற்றுக்கிழமை சொகுசு கார் ஒன்று வெகு  நேரமாக நின்றது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறை யினர் காரில் இருந்த, ராஜஸ்தான் மாநிலம் பவாத்ரா பகுதி யைச் சேர்ந்த ஹரிஷ் ராஜ்(21), என்பவரை பிடித்து விசா ரித்தனர். அப்போது ஹரிஷ் ராஜ், தான் பெங்களூரில் இருந்து நண்பரை பார்க்க வந்து இருப்பதாக தெரிவித்தார். பின்பு, காவல்துறையினர் காரை சோதனை செய்த போது  காரில் ஒன்றும் இல்லை. பிறகு கார் பதிவெண்ணை சோதனை செய்தபோது, அந்த பதிவெண் தவறுதலாக  இருந்துள்ளது. இதுகுறித்து ஹரிஷ் ராஜிடம் கேட்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை பறி முதல் செய்து ஹரிஷ் ராஜை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கரிக்காடு பகுதியில் குடோன் ஒன்றில், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதாகவும், அதனை வாங்க வந்தாகவும் கூறி ஹரிஷ்  ராஜ் கூறி, குடோனுக்கு காவல்துறையினரை அழைத்துச்  சென்றார். காவல்துறையினர் வருவதை பார்த்த குடோ னில் இருந்த கார் ஓட்டுநரான பிரதீப், டீலர் ஜெயக் குமார், தேஜ்ராம் ஆகியோர் தப்பியோடினர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல்துறை யினர் வழக்குப் பதிந்து, குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 600 கிலோ புகையிலை பொருட்களை யும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து, வழக்குப்  பதிந்து ஹரிஷ் ராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர்.

சட்ட விரோதமாக மணல்  அள்ளிய 4 பேர் கைது

கும்பகோணம், ஆக.26 -  தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் தனிப்படை உதவி  ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான காவலர்களுக்கு,  கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் காவல்நிலைய  சரகம் சேஷம்பாடி பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி  மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த னர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒரு  ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு டிராக்டர் டிப்பர்களை மணலுடன் பறிமுதல் செய்தனர். மணல் அள்ளியது தொடர்பாக சேஷம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், ரெட்டி  பாளையத்தைச் சேர்ந்த சாமிஅய்யா, தேவா, நாச்சியார் கோவில் கூகூரைச் சேர்ந்த மனோஜ் ஆகியோரிடம் பட்டீஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி கும்பகோணம் அரசு கல்லூரி  மாணவிகள் 3 பேருக்கு  ரூ.10 ஆயிரம் பரிசு

கும்பகோணம், ஆக.26 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி, தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டி தஞ்சாவூரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளி லிருந்தும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  போட்டியின் முடிவில் கும்பகோணம் அரசினர் கலைக்  கல்லூரி மாணவிகள் உ.அஸ்வினி (3 ஆம் ஆண்டு பொரு ளியல் துறை), ம.மகாஸ்ரீ (2 ஆம் ஆண்டு, இயற்பியல் துறை) மற்றும் ம.காவியா (முதல் ஆண்டு, இயற்பியல் துறை) ஆகியோர் முதல்சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த மாணவிகளின் தனித்திறமையைப் பாராட்டி, ஒவ்வொரு மாணவியர்க்கும் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தஞ்சை மாவட்ட திமுக  இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற  மாணவியர் மூவரும் அடுத்தச் சுற்றுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகளை கல்லூரி முதல்வர் அ.மாதவி பாராட்டினார். இந்நிகழ்வில், தேர்வு நெறியாளர்  இரா.ச. சுந்தரராசன், தமிழ்த்துறைத் தலைவர் செ.காளிமுத்து, கவின்கலை மன்ற பொறுப்பாளர்கள்  வாழ்த்தினர்.

பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

சிவகாசி, ஆக.26- சிவகாசியில் தகர செட்டில் பட்டாசு திரி மற்றும் உள்  இன்னர் குழாய்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது   செய்தனர். சிவகாசி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இலக்கி யமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற னர். கொங்கலாபுரம் பெட்ரோல் நிலையம் அருகே தனி யாருக்கு சொந்தமான தகர செட்டில் ஆய்வு செய்தனர்.  அப்போது, அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படும் மிசின் திரி மற்றும் உள் இன்னர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீ சார் சேர்ம சங்கர் (38) என்பவரை கைது செய்தனர்.

கிடங்கில்  விழுந்த முதியவர் பலி

அருப்புக்கோட்டை, ஆக.26- அருப்புக்கோட்டையில் தண்ணீர் கிடங்கில் குளித்த முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த வர் பாண்டியராஜ்(70). இவர் பெரிய கண்மாய் அருகே  உள்ள தண்ணீர் கிடங்கில் குளித்துக் கொண்டிருந்துள் ளார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெயர் பலகை மீது பேருந்து மோதி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தூத்துக்குடி, ஆக.26- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டி ருந்தது. பேருந்தை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோதி சீனி பாஸ் (58), தூத்துக்கு டியை சேர்ந்த நடத்துனர் ஆனந்த ராஜ் (36), இயக்கி வந்துள்ளனர். அப்போது, முத்தையாபுரம், உப்பாத்து ஓடை பாலம்  அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது சாலை யின் நடுவே உள்ள பெயர் பலகை மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பேருந்தில் இருந்த நடத்துனர் ஆனந்த ராஜ் மற்றும் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்ட பயணி கள் காயம் அடைந்தனர்.‌ அப்போது காயம் அடைந்த பயணிகள் பேருந்தை ஓட்டுநர் வேகமாக ஓட்டி வந்த தாக திட்டியபடி பேருந்தில் இருந்து வெளியே வந்தனர்.  பின்னர், காயமடைந்தவர்களை உடனடியாக 108  ஆம்புலன்ஸ்  வரவழைக்கப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக் குடி முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.