மயிலாடுதுறை, ஆக.24-
மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி-கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக் கப்பட்டு ஒரே ரயிலாக மயிலாடுதுறை தின சரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரி யம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மயிலாடுதுறை-சேலம் இடையிலான மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் வரும் ஆக.28-முதல் இயக்கப் பட உள்ளது.
வண்டி எண்: 16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை யில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 8.01 மணிக்கு வந்து 8.04 மணிக்கு புறப்பட்டு, திருச்சிராப்பள்ளிக்கு க்கு காலை 9.30 மணிக்கு வந்தடைகிறது.
அங்கிருந்து 9.40 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு 11.43-க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 11.45-க்கு புறப்பட்டு நாமக்கல்லுக்கு 12.29 மணிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 12.30 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு மதியம் 1.45 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், வண்டி எண்: 16812 சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு நாமக்கல்லுக்கு 2.54 மணிக்கும், கரூருக்கு 3.38 மணிக்கும், திருச்சிக்கு 5.55 மணிக்கும் சென்றடைகிறது.
பின்னர் திருச்சி யில் இருந்து 6.05 மணிக்கு புறப்பட்டு தஞ்சா வூருக்கு இரவு 7.15 மணிக்கும், மயிலாடு துறைக்கு இரவு 9.40 மணிக்கும் சென்றடை கிறது. இந்த ரயிலில் பத்து இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், இரண்டு சரக்குப் பெட்டி களும் இணைத்து இயக்கப்பட உள்ளது.