districts

img

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.12-  போலி மருந்தாளுநர்களை ஒழித்திட கோரி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மருந் தாளுநர்கள் சனிக்கிழமையன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் டி.கார்த்திக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரா.சோ.வசந்த குமார், செயற்குழு உறுப்பினர் கள் பி.செபசீலன், ஆர்.கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செய லாளர் ஏ.ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி உள்ளிட் டோர் ஆதரித்துப் பேசினர். போலி மருந்தாளுநர்களை ஒழித்திட வேண்டும். வலி மருந்து கள் போதை தரும் மருந்து களை இளைஞர்களிடம் விற்பனை செய்வதை தடை  செய்ய வேண்டும். மருந்தாளு நர்கள் முழுநேர பணியாளர்க ளாக பணிபுரிவதை உறுதிசெய்ய வேண்டும். மருந்தாளுநர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்திட வேண்டும். ஆன் லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;