திருச்சிராப்பள்ளி, ஆக.19- பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்து துறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் ஒன்றிம் அபினி மங்கலம் கிராமத்தில் பட்டி யல் சமூக குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க மனோபாவ சிந்தனையா ளர்களைக் கைது செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் புலிவலத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஜே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மூத்த தோழர் தா.பேட்டை சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், ஒன்றியச் செய லாளர்கள் துறையூர் எம் ஆனந்தன். முசிறி டி.பி.நல்லுசாமி, திருவெறும்பூர் மல்லிகா, மண்ணச்சநல்லூர் கிழக்கு கனகராஜ், தா. பேட்டை எஸ்.பாண்டியன், மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.ரஜினி காந்த், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. கோமதி, லிங்க ராணி, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வீர விஜயன், பாலகுமார், ஆதனூர் ராஜேஷ், புலி வலம் வீராசாமி, அப்துல் ரகுமான், வாலிபர் சங்க முசிறி ஒன்றியச் செயலாளர் விசத்ய ராஜ், எஸ்.முருகேசன், வி.பொன்னுசாமி, கமலம், கணேசன், எம்.சங்கிலிதுரை ஆகியோர் பங்கேற்றனர்.