திருச்சிராப்பள்ளி, ஏப்.16 - திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகு நர்களை நியமனம் செய்வதை ஊக்குவி க்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் ஏப்.21 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியள வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் நடக்கிறது. இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2017-18, 2018-19, 2019-20, 2020-21 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சி யாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி யடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபா லரும்) கலந்து கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகு நர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ. 7000 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுப வர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான விவரங்களை திருவெறும்பூ ரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொ டர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தெரிவித்துள்ளார்.