தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, கரிக்காடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை கூட்டம் மூத்த தோழர் மெரினா ஆறுமுகம் தலைமை யில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பட்டுக்கோட்டை நாடி யம்பாள்புரம் பாசன வாய்க்கால் கல்ல ணைக் கால்வாய் கிளை வாய்க்காலாக இருந்தது. தற்போது இந்த வாய்க்கா லில் பாசனத்திற்கு தண்ணீர் வருவ தில்லை. அருகில் உள்ள வீடுகளின் கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டு பாசன வாய்க்காலில் விடப்படுகிறது. மேலும், குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கி நின்று துர் நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகு தியில் பொதுமக்கள் குடியிருக்க முடி யாத நிலை உள்ளது. மேலும், இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு நல்ல தண்ணீர் வருவதில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நாடியம்பாள்புரம் பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுப் பணித்துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, முறையாக தூர்வாரி பாச னத்திற்கு தண்ணீர் செல்லும் வகை யில் சீரமைக்க வேண்டும். சட்டவிரோ தமாக விடப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை அகற்ற வேண்டும். கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்ட பாசன வாய்க்காலை, உடனடியாக சீர மைக்க வேண்டும். இந்த கழிவு நீர் வாய்க்காலை, மீண்டும் பாசன வாய்க் காலாக விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.