தஞ்சாவூர், செப்.25- தஞ்சாவூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில், மக் கள் குறைதீர் கூட்டம், ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமை யில் திங்கட்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல் விக்கடன் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் அடங் கிய 560 மனுக்களை ஆட்சி யர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய் யப்பட்ட தூய்மைப் பணியா ளர்களுக்கு, தாட்கோ நிதி உதவியுடன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தால் கட்டப் பட்ட அடுக்குமாடி குடியி ருப்பு, வீட்டிற்கான சாவி களை, 11 பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாது காப்புத் திட்டம்) தவவள வன், தாட்கோ மாவட்ட மேலாளர் தா.ரெங்கராஜன் மற்றும் அரசுத் துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.