districts

img

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் 3 ஆவது நாளாக போராட்டம்

அரியலூர், ஜூலை 3- ஒப்பந்த கடிதத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் அரியலூர் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் 3 ஆவது  நாளாக புதன்கிழமை காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். விளாங்குடியை அடுத்த காத்தான்குடிக் காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர்  பணியாற்றி வருகின்றனர். இதில் ஒப்பந்தப்  பேராசிரியர், பணியாளர்களுக்கு 6 மாதங் களுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு கடிதம், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு  முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடிதத்தில்  ஒப்பந்தப் பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் என 67 பேர் கையொப்பமிட்டனர். அப்படி கையொப்பமிட்ட ஒப்பந்த ஆணை யின் நகல்களை கல்லூரி முதல்வர் தர மறுப்பதாகவும், பேராசிரியர்கள் மீது காழ்ப்பு ணர்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு  கடிதம் வழங்கத் தடையாக இருப்பதாக வும் குற்றம் சாட்டி அனைத்துத் துறை பேரா சிரியர்கள், பணியாளர்கள் கல்லூரி வளாகத் தில் 3 ஆவது நாளாக புதன்கிழையும் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.