புதுக்கோட்டை, நவ.8- ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் ஆங்காங்கே அன்னநடை நடந்துவரும் பாரதிய ஜனதா கட்சி யின் மாநிலத் தலைவர் கே.அண்ணா மலை தொடர்ந்து பொய் மூட்டை களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டு களையும் அவிழ்த்துக் கொண்டே வருகிறார். அதனொரு பகுதியாக புதுக் கோட்டை நகரத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்து வந்து அண்ணாசிலை அருகே தனது ‘நெடும்பயணத்தை’ நிறைவு செய்தார். அப்போது வழக்கம் போல உண்மைக்குப் புறம்பான பல தகவல்களைக் கூறி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பகடிக்கு உள்ளானார். ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. 18 கோடி ரூபாய்க்கு போட வேண்டிய ஒரு கிலோ மீட்டர் சாலையை ரூ.250 கோடிக்கு போட்டதாக கணக்கு காட்டி யதை ஒன்றிய அரசின் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் வாதியாக மோடி நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார் என்று தமிழக முதல்வர் குற்றம்சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத் துடன் மறுக்க திராணியில்லாத அண்ணா மலை, மோடி ஊழல்வாதியா?, இல்லையா? என்பதற்கு மக்கள் பதி லளிப்பார்கள் என்றார். இதைக் கேட்ட மக்கள் “அவர் செய்த ஊழலுக்கு நாங்க ஏன் பதிலளிக்கணும்” என்ற முணுமுணுப்பை அந்தக் கூட்டத்தி லிருந்தே காண முடிந்தது. புதுக்கோட்டை மன்னர் பற்றி... மேலும், புதுக்கோட்டையைப் பற்றியும் பல்வேறு தவறான தகவல் களை அவிழ்த்துவிட்டார். இந்தியா விடுதலையடைந்த அடுத்த நிமிடமே புதுக்கோட்டை மன்னர் தனது கஜானா முழுவதையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தார் என்றார். நாடு விடு தலை அடைந்த ஒரு வருடத்திற்குப் பிறகே, புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்பது 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்த அண்ணாமலைக்கு தெரிந் திருக்க வாய்ப்பில்லைதான்.
அதேபோல, புதுக்கோட்டை நகர்மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, இரண்டாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வரு கிறது. ஆனால், நகர்மன்றம் இன்ன மும் பழைய கட்டிடத்திலேயே செயல் படுவதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் கூறினார். இவர் திமுகவின் தேர்தல் அறிக்கையையும் படிக்க வில்லை. புதுக்கோட்டையை பற்றியும் தெரிந்திருக்கவில்லை என்பதை அவரே போட்டு உடைத்துவிட்டார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இழந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்போம் என்றார். புதுக்கோட்டை தொகுதியை தமிழ்நாடு அரசுதான் பறித்து வைத் திருப்பது போலவும், இவர் தலைமை யில் ஆட்சி அமைந்தவுடன் மீட்பதாக வும் உளறிக் கொட்டினார். புதுக்கோட்டை மன்னருக்கு அருங் காட்சியகம் அமைக்க மாவட்ட ஆட்சி யர் வளாகத்திலேயே தமிழக அரசு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதைக்கூட அறியா மல், புதுக்கோட்டை மன்னரை தமிழ்நாடு அரசு இழிவுபடுத்தி விட்ட தாகக் கூறி, இவரே தன்னை இழிவு படுத்திக் கொண்டார்.
ஆட்டுக்குட்டியும் அண்ணாமலையும்
இவற்றுக்கெல்லாம் மேலாக, கூட்டம் முடியும் தருவாயில் ஒரு கிடாய் குட்டியை ஒரு பெண்ணிடம் அன்பளிப் பாகத் தந்தார். அப்போது இந்த ஆடு பல குட்டிகள் போடும். இதை வைத்து உங்கள் குடும்பம் செழித்து வளரும் என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்களே, அண்ணே... இது கிடாய்க்குட்டி; குட்டி போடாது எனக் கத்தினர். அதைக்கூட காதில் வாங்காமல் அந்த கிடாய்க்கு ‘சிவகாமி’ என்ற பெயரையும் சூட்டி தனது யாத்திரையை அண்ணாமலை திங்கள்கிழமை இரவு நிறைவு செய்தார். தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக கூட்டம் கலைந்து சென்றது. (ந.நி)