கும்பகோணம், பிப்.11- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் இலங்கேஸ்வரன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை. பூபதி, பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் பள்ளி வளர்ச்சி சங்க தலைவர் சபிக்குர் ரஹ்மான், துணை தலைவர் தங்கவேல், செயலாளர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஞானதேவி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தியதுடன், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டியில் வென்றவர்கள் மற்றும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விடுமுறை எடுக்காத மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.