districts

பேராவூரணியில் தென்னை சார் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

பேராவூரணி, ஏப்.16-  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி எம்.எஸ்.விழா அரங்கில், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயி கள் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் தென்னை விவ சாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  

சங்கத்தின் தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். செய லாளர் விஸ்வ.ராம்குமார் வரவேற் றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், நாம் உழவர் இயக்கத் தலைவர் பிரபுராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர்  கே.வைரவன், தென்னை உற்பத்தி யாளர் சங்க மாநில செயலாளர் அறந் தாங்கி பி.செல்லதுரை, வடகாடு மிளகு அறிமுக விவசாயி கே.பாலுச் சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவன ச.வே.காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இல.சி.இலக்குவன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இணைச் செயலாளர் ஏ.முகமது சமீர் நன்றி கூறி னார்.

கூட்டத்தில், “பொதுமக்கள் அனைவரும் தேங்காய் எண் ணெய்யை பயன்படுத்த முன்வர வேண்டும். பேராவூரணி பகுதி தென் னைக்கு தமிழ்நாடு அரசு புவிசார்  குறியீடு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு  பெற உரிய ஆதாரங்களை திரட்டி தரு வது எனவும் முடிவு செய்யப்பட்டது.  

தமிழக அரசு தேர்தல் வாக்குறு தியில் பரீட்சார்த்த அடிப்படையில் அனைத்து ரேசன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்  என்று அறிவித்ததை நடைமுறைப் படுத்த வேண்டும். சத்துணவு திட்டத் தில் தேங்காய் எண்ணெய்யை பயன் படுத்த வேண்டும். ஆவின் நிறுவனம்  போன்று, தென்னை உற்பத்திக்கு பொது இடங்களில் விற்பனை நிலை யம் அமைத்து, இளநீர், நீரா, தேங்காய்ப்பால், தேங்காய் பவுடர்,  தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட வற்றை விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

 உடனடி நிவாரணமாக தேங்காய்  கொப்பரையை மூடி வைக்க தார்ப்பாய் வழங்க வேண்டும். தென் னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களை தயாரிக்கும் தொழிற்சாலை யும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வேளாண் அறி வியல் பயிற்சி மையம் (கே.வி.கே)  அமைக்க வேண்டும். தென்னை அதிகம் விளையும் பகுதியான பேரா வூரணி கிழக்கு கடற்கரையை ஒட்டிய  பகுதியில் தென்னை சார் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.