districts

திருச்சி முக்கிய செய்திகள்

வேளாண் கணக்கெடுப்பு பயிற்சி

பாபநாசம், ஜூலை 6-  தஞ்சாவூர் மாவட்ட புள்ளியியல் துறை சார்பில்  வேளாண்மை கணக் கெடுப்பு இரண்டாம் கட்ட  பயிற்சி வகுப்பு நடை பெற்றது. பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பை  பாபநாசம் தாசில்தார் மணி கண்டன் துவக்கி வைத் தார். கோட்ட புள்ளியியல் உதவி இயக்குநர் ரவிச் சந்திரன், வட்டார புள்ளியி யல் ஆய்வாளர்கள் புவ னேஸ்வரி, அமுதவள்ளி ஆகியோர் பயிற்சி வழங்கி னர். இதில் பாபநாசம் தாலு காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்  குழுவினருக்கு பயிற்சி

பாபநாசம்,  ஜூலை 6 - அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் தின் கீழ், தஞ்சாவூர் மாவட் டம் திருமண்டங்குடி கிரா மத்தில் 40 வேளாண் முன் னேற்றக் குழு உறுப்பி னர்களுக்கு முன் பருவ பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் பிரபா கரன் தலைமை வகித்தார். பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன்  முன்னிலை வகித்துப் பேசி னார். இதற்கான ஏற்பாட் டினை கூனஞ்சேரி பகுதி உதவி வேளாண்மை அலு வலர் பிரிய தர்ஷினி, உதவி  தொழில்நுட்ப மேலா ளர்கள் பிரியா, ரஞ்சனி  ஆகியோர் செய்திருந்த னர்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம்

அறந்தாங்கி, ஜூலை 6 - புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி வட்டார  வளமையத்தில் அனைத்து  தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வட்டார கல்வி அலு வலர் செழியன்  தலைமை யில் நடைபெற்றது. 

வட்டார கல்வி அலுவ லர் அமுதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இந்நிகழ்வில் எமிஸ்-இல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு நூறு சதவீதம் செய்தல் வேண்டும். எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு பெற்ற விவரத்தை எமிஸ்-இல் பதிவு செய்தல் வேண்டும். பள்ளிச் செல்லா  குழந்தைகள் பற்றிய விவ ரங்கள் பதிவு செய்தலின் அவசர அவசியம் குறித் தும், புதிய பாரத எழுத்தறி வுத் திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஹைடெக் பயிற்றுநர் பணி சார்ந்த தகவல் குறித்தும் பேசப் பட்டது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 6- தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்ம னுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாட்கள் ஆஷாட  நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி  நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இதைத் தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சனிக்கிழமை மஞ்சள் அலங்காரமும், ஞாயிற்றுக்கிழமை குங்கும அலங்கா ரமும், ஜூலை 8 அன்று சந்தன அலங்காரமும், ஜூலை 9  அன்று தேங்காய்பூ அலங்காரமும், ஜூலை 10 அன்று மாதுளை  அலங்காரமும், ஜூலை 11 அன்று நவதானிய அலங்கார மும், ஜூலை 12 அன்று வெண்ணெய் அலங்காரமும், ஜூலை  13 அன்று கனி வகை அலங்காரமும், ஜூலை 14 அன்று காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன.

நிறைவு நாளான ஜூலை 15 அன்று அம்மனுக்கு புஷ்ப  அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதி களிலும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன. இவ்விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் நாள்தோறும் மாலையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 6 - பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 இதில் ஆட்சியர் தெரிவிக்கையில், “பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகள் குறித்தும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்தும், காவல் ஆய்வாளர்களின் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலுவைகள் குறித்தும்,  பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்ப டுத்துதல் குறித்தும், குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது.  

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்க ளின் மீது வரப்பெறும் புகார்களில் விரைந்து நடவடிக்கை எடுத்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது” என்றார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந. கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.