districts

img

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வயது வரம்பைக் குறைக்க வேண்டும்

தஞ்சாவூர், செப்.27 - பாரத ஸ்டேட் பேங்க் முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் (AFCCOM) 8 ஆவது பொதுக் குழு கூட்டம்  22.9.2024 அன்று தஞ்சாவூரில் நடை பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.பி.  இராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத் தில், துணைத்தலைவர் டி.வி. சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம்.முருகையா மற்றும்  ஸ்டேட் பேங்க் ஊழியர் சங்கத்தின் முன்னாள்  பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், வங்கி ஓய்வூதியர் களுக்கான கம்யூட்டேஷன் தொகை பிடித்தத்தை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு களாகக் குறைக்க வேண்டும். ஏழு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மறு  பரிசீலனையை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். வங்கி ஓய்வூதியர்களின் சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை பொதுத் துறை வங்கிகளே ஏற்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வயது வரம்பைக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் அமைக்க வேண்டும். பொதுக்  காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மய மாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் வங்கி மருந்தகங்கள் நிறுவப்பட வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ரகுநாதன்  வரவேற்றார். உதவி பொருளாளர் வீ. பூமி நாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டுரெங்கன், எஸ்.கருணாகரன், ஆர்.லோகநாதன், எஸ்.பாலசுப்பிரமணியன், முன்னாள் செயலாளர் வி.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். AFCCOM செயலா ளர் எம்.கே. மூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.  வேலூர் ஆர். லோகநாதன் நன்றி கூறினார்.