districts

img

திருச்சியில் கடை போடும் போராட்டம் ஒத்திவைப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16- திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டைப் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே கடந்த 40 ஆண்டு களாக சிறிய மர வேலை செய்து பிழைத்து  வரும் வியாபாரிகளின் கடை களை காலி செய்த மாநகராட்சி நிர்வா கம் கம்பி வேலி அமைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு இயற்றிய 2018- அரசாணையை அமல்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தி தள்ளுவண்டி, தரக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழனன்று  கடை போடும் போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதையொட்டி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின்,  தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டப் பொருளாளர் சுரேஷ், தரைக்கடை நிர்வாகிகள் கோவிந்தன், செந்தில், ரத்தினம், புஷ்பாகரன், கோபால், டி.கணேசன், அப்துல்லா உட்பட ஏராளமேனார் கடை போடும் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். தகவலறிந்த  மாநகராட்சி அதிகாரிகள், காவல் உதவி ஆணையர் மற்றும் காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கம்பி  வேலி ஒரு நாளில் அகற்றப்படும். வெள்ளிக்கிழமை முதல்  கடைகள் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப் படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து  போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.